பள்ளி கட்டணம் செலுத்தாததால் மாணவர்களுக்கு நடந்த கொடுமை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்கட்டணம் நிலுவையில் இருந்ததால் அப்பள்ளியில் படிக்கும் 50 மாணவர்களை கொளுத்தும் வெயிலில் அப்பள்ளியின் முதல்வர் உட்கார வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், சித்தார்த்நகரில் அமைந்துள்ள ஷியாம்ராஜி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கட்டணம் கட்டாமல் நிலுவையில் வைத்திருந்ததால், அவர்களை அப்பள்ளியின் முதல்வர் கொளுத்தும் வெயிலில் அமர்த்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அம்மாவட்ட ஆய்வாளர் கவனத்திற்கு சென்றது. இது குறித்து தெரிவித்த அவர், “ இப்படி செய்வது மிகவும் வெட்கக்கேடானது. இது குறித்த தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைப்பு: https://twitter.com/i/status/1841084048283709835

Related Posts