ரொறன்ரோவில் ஒரே நாளில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் ஒரே நாளில் நான்கு பேர் படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடீஸ் பகுதியில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்க பட்டு இருந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 33 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோட்டீஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் குறித்த பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்த மரணங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த இரண்டு பெண்களினதும் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சிறுமி ஒருவர் இருந்ததாகவும் அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் நேற்றைய தினம் பதிவான நான்காவது படுகொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts