கொழும்பு துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஜூலை 13 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு கோட்டையில் உள்ள பழைய செயலகக் கட்டிடத்திற்கு அருகில் நிலத்தடியில் 6 அடி தோண்டும் கட்டுமானப் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் தலைமையில் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கட்டத்தில் சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் இருந்தனர். தேவையேற்படின் குறித்த மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட OMP (காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்) க்கு நீதவான் அங்கீகாரம் அளித்துள்ளார்.

முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின் பின்னர் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 26, 27, 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு (வடக்கு) குற்றத்தடுப்புப் பிரிவின் ஆய்வகத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.

அந்த இடத்தில் மேலும் பல எலும்புக்கூடுகள் வெளிப்பட்டிருப்பதால், அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி அவசியம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சங்களின் தோற்றம் மற்றும் பின்புலம் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். (P)


Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை