சர்*ச்சையாக பேசி மாட்டிக்கொண்ட மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு என்பவரால் பெரும் சர்ச்சை வெடித்தது. பள்ளியில் சொற்பொழிவு நடத்தும் போது, போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் தான் இந்த ஜென்மத்தில் மாற்று திறனாளிகளாக பிறப்பார்கள் என்று கூறி ச*ர்ச்சைக்கு ஆளானார். இது தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினரும் மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்த நிலையில் அவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது சிறையில் இருக்கும் மகாவிஷ்ணு ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்‌. அதோடு தான் பேசியது மாற்றித் திறனாளிகளை புண்படுத்தி இருந்தால் நிபந்தனை ஏற்ற மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்‌. இந்நிலையில் தற்போது மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Posts