நோயாளி போல் சென்று மருத்துவரை சுட்டுக்கொன்ற இளைஞர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தெற்கு டெல்லி மாவட்டம் ஜைத்பூரில் உள்ள நிமா என்ற தனியார் மருத்துவமனைக்குக் கடந்தசெவ்வாய்க்கிழமை 17 வயதுமதிக்கத்தக்க இருவர் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவருக்குக் கால்விரலில் காயம் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அடுத்தநாள் இரவு மீண்டும் இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். முந்தைய நாள், கால்விரல் காயத்துக்குப் போடப்பட்ட கட்டை பிரித்து புதிதாகக் கட்டுப்போட வேண்டும் என்றுசெவிலியரிடம் கேட்டனர்.

கட்டு மாற்றப்பட்ட பிறகு மருத்துவரைச் சந்தித்து மருந்துச்சீட்டு பெற்றுக்கொள்ள அனுமதி கோரினர். இதையடுத்து உள்ளே அமர்ந்திருந்த யுனானி மருத்துவர் ஜாவெத் அக்தர்  அறைக்குள் இருவரும் சென்றனர். அடுத்த சிலநிமிடங்களில், மருத்துவர் அறையிலிருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டு செவிலியர்கள் உள்ளே சென்றபோது மருத்துவர் ஜாவெத் அக்தரின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையில் இரண்டு பேரும் தப்பியோடினர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார் சிசிடிவி கேமராபதிவுகளின் அடிப்படையில் மருத்துவரை கொலை செய்தது அந்த இரண்டு பதின்ம வயதினர்தான் என்பதை உறுதி செய்தனர். கொலையாளிகள் சூழலை நோட்டம் விடுவதற்காகத்தான் முந்தைய இரவு சிகிச்சை பெற வந்திருக்கக்கூடும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts