திருப்பூர் வெடி விபத்து: 9 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் உள்ள பொன்னம்மாள் வீதியில் கார்த்திக், சத்திய பிரியா தம்பதியினர் வசித்து வரும் வீட்டில் திருவிழாவுக்கான பட்டாசுகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென வெடிவிபத்து நடந்தது. 

விபத்து நடந்தது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் கூறுகையில், வெடி விபத்தின்போது பலத்த சத்தம் கேட்டதாகவும், உடல் சிதறி அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல்துறையினர் மேலதிக தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். குமார், 9 மாத குழந்தையான ஆலிய செர்ரின் மற்றும் உடல் சிதறிய நிலையில் பெண் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல் சிதறி உயிரிழந்த பெண் யாரென தெரியவில்லை என்றும் அடையாளம் காணும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

Related Posts