விமானப்படை அணிவகுப்பில் மயங்கி விழுந்த வீரர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் அணி வகுப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது, வெயிலின் தாக்கத்தின் காரணமாக அணிவகுப்பு நடைபெற்ற போது, 3க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து மயக்கமடைந்த வீரர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts