உணவு ஒவ்வாமையால் 21 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நுவரெலியா - வலப்பனை - படகொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 21 மாணவர்கள், இன்று காலை, திடீர் சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமை காரணமாகவே, மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகயீனமுற்ற மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன. (P)


Related Posts