இன்று எங்கெல்லாம் கனமழை? எங்கெல்லாம் மிதமான மழை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது புயலாக வலுப்பெற உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றாலும் மழை பெய்யக்கூடும். இந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி, கரூர், மதுரை, திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ள மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று நாளை திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனையடுத்து அக்டோபர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது..

Related Posts