Font size:
Print
யாழ்ப்பாணம் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் கொண்டவர் பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது-44). கனடாவில் மார்க்கம் பகுதியில் வசித்து வந்தார்.
மார்க்கமில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து ஞாயிறன்று அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அவர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
முன்பகை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.
Related Posts