Font size:
Print
ரஷியாவின் பர்கோஷ்தான் குடியரசில் உள்ள உபா பகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவ பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சிறுவன் ஒருவன் கத்தியுடன் புகுந்து அங்கிருந்தவர்களை அங்கிருந்த 4 இந்திய மாணவர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், தாக்குதல் நடத்திய சிறுவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதில் 2 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக ரஷியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் ரஷிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Posts
