தெஹ்ரானில் அமெரிக்கா-இஸ்ரேல் பயங்கர தாக்குதல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையிலான போர் ஒன்பதாது நாளை எட்டியுள்ள நிலையில், போர் சூழல் மிகவும் அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய அரசு மற்றும் இராணுவக் கட்டமைப்புகளைக் குறிவைத்து, இஸ்ரேலியப் படைகள் நேற்று 'பரந்த அளவிலான' வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன. 

இதனால் தெஹ்ரானின் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையப் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் கரும்புகை சூழ்ந்துள்ளதைக் காண முடிகிறது. 

போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானின் 'நிபந்தனையற்ற சரணடைதலைத்'  தவிர வேறு எந்த ஒப்பந்தமும் சாத்தியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

போர் தீவிரமடைந்து வரும் அதே வேளையில், ஈரானின் தற்போதைய இராணுவ நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அண்டை நாடுகளின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை இனி மேற்கொள்ள வேண்டாம் என ஈரானின் இடைக்காலத் தலைமை கவுன்சில் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியன் தெரிவித்துள்ளார். 

அண்டை நாடுகளிலிருந்து தாக்குதல் நடத்தப்படாதவரை, ஈரான் தரப்பில் தாக்குதல்கள் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த இராணுவப் பிரச்சாரம் இன்னும் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த மோதல்களால் வளைகுடா பிராந்தியத்தின் வான்வெளி மற்றும் கடல்வழிப் போக்குவரத்தில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் துபாய் சர்வதேச விமான நிலையம் தனது விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களை இடைமறித்தபோது விழுந்த சிதைவுகளால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஹார்முஸ் நீரிணை போன்ற முக்கியமான வர்த்தகப் பாதைகள் முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.

Related Posts
©   Thedipaar

எகிறியது எண்ணை விலை

©   Thedipaar

கனடாவில் அவசரநிலை