யாழில் இருந்து புறப்பட்டது அன்னை பூபதி நினைவு ஊர்தி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தியாக தீபம் அன்னை பூபதியின் திருவுருவ படம் தாங்கிய ஊர்தி வடக்கின் யாழ்ப்பாணத்திலிருந்து கிழக்கு நோக்கி புறப்பட்டது.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவரது திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழப்பாணம் நல்லூர் வீதியிலுள்ள தியாக தீபம் திலீபன்  நினைவிடத்தில் நீதிமன்றுக்கு அஞ்சலி செலுத்தி இன்று காலை இந்த ஊர்தி பணி ஆரம்மாகிமது.

யாழில் இருந்து இன்று ஆம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்தி வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறுதியாகமட்டக்களப்பில் உள்ள அன்னை பூபதி அம்மாவின் நினைவிடத்தை  சென்றடையவுள்ளது.

பின்னர் அங்கு இறுதி நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts