Font size: 15px12px
Print
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு அரங்கேறி வருகிறது. இந்த சம்பவங்களை விசாரித்து வரும் அமெரிக்கா எப்.பி.ஐ., அதிகாரிகள், சில பயங்கரவாத சக்திகளின் பங்கு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டு இருந்தார். இது போன்ற வன்முறைகள் முட்டாள்தனமானது மற்றும் மிகவும் தவறானது என்று எலான் மஸ்க் காட்டமாக கூறி இருந்தார். இந்நிலையில், டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
Related Posts