மனைவியுடன் பொலிஸூக்கு வந்தார் யோஷித

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்திற்கு, வருகைதந்துள்ளார். கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிலுள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்கவே இவ்விருவரும் வந்துள்ளனர். ஒரு இரவு விடுதியில் ஒருவர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக கொம்பனி வீதி பொலிஸாரினால் நடத்தப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக வந்துள்ளனர். இதேவேளை, அந்த சம்பவத்துக்கும் யோஷித ராஜபக்ஷவுக்கும் இடையில் எவ்விதமான தொடர்பும் இல்லையென, பொலிஸார், திங்கட்கிழமை (24) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (P)

Related Posts