Font size: 15px12px
Print
பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது சென்னையில் கோயம்பேடு, நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனிடையே, அடுத்து வரக்கூடிய மூன்று மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Related Posts