விஜயகாந்த் சமாதியில் பிரபல நடிகர் எடுத்த சபதம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை விஜயகாந்த் மறைவுக்கு பல நட்சத்திரங்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சூர்யா இன்று விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் விட்டு அழுதார். மேலும் காமெடி நடிகர் புகழ் இரண்டாவது முறையாக விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். விஜயகாந்த் மறைந்த அன்றே நேரில் வந்து புகழ் அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் புகழ் மீண்டும் இரண்டாம் முறையாக விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் கூடவே பயணித்த பல நடிகர்கள் கூட நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. ஆனால் அவரால் பயனடைந்த மக்களும் அவருக்காக நம்பி ஓட்டுப்போட்ட மக்களும் குவிகிறார்கள் அஞ்சலி செலுத்த!

வெளிநாட்டில் இருந்து கூட மக்கள் இந்தியாவிற்கு வந்து, அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இந்தநிலையில் நடிகர் புகழ் விஜயகாந்த் சமாதியில், கேப்டன் போல நானும் என்னுடன் கே கே நகர் ஆபிசில் தினமும் மதியம் பசி என வருபவர்களுக்கு உணவளிக்க போகிறேன். அதை இன்று தொடங்குவதால் அதற்காக கேப்டனிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன் என புகழ் கூறி இருக்கிறார்.

Related Posts