அடப்பாவிகளா! போதை சாக்லேட் மாணவர்களுக்கு விற்பனையா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹைதராபாத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவர்களின் நடவடிக்கைகள் திடீரென மிகவும் மோசமானதாக மாறியுள்ளது. வகுப்பறையில் எல்லை மீறி நடந்து கொள்ளுவதுடன் மாணவர்கள் சிலர் ஆசிரியர்களிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என பள்ளி தலைமை விசாரணை நடத்தியுள்ளது. பள்ளிக்கூடத்தின் வெளியே இயங்கி வந்த பீடா கடையில் விற்கும் சாக்லேட்டுகளை வாங்கி சாப்பிடும் மாணவர்களுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தெரிய வந்தது. மாணவர்கள் சிலரை வைத்து அந்த சாக்லேட்டுகளை வாங்கி சோதனை செய்துள்ளனர் ஆசிரியர்கள். போதை சாக்லேட்டுகளை மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.உடனே அந்த கடையில் போலீசார் ரெய்டு நடத்தி, ஏராளமான போதை சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Posts