இந்த சீரியலுக்கு மட்டும் ஏன் மக்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பு?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சிறகடிக்க ஆசை தற்போது அதிக TRB ரேட்டிங்கில் உள்ளது. நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகி கொண்டே செல்கிறார்கள். அழகிய குடும்பம், விறுவிறுப்பான கதைக்களம், ஒரே விஷயத்தை அப்படியே இழுக்காமல் உடனே உடனே திருப்பங்கள் இருப்பது, குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதை அடிக்கடி கூறுவது என நிறைய ரசிகர்கள் ரசிக்கும் விஷயங்கள் இதில் அதிகம் உள்ளது. இப்போது வரும் சீரியல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களம். முக்கியமாக எதார்த்தம் நிறைந்த தொடர். இந்த காலத்தில் வரும் சீரியல்கள் பெரும்பாலும் எதார்த்தமாக இருப்பது இல்லை உதாரணத்திற்கு கிராமத்து ஹீரோயின் நகரத்தில் தாவணி பாவாடை போட்டு கொண்டு செல்வது. 

இந்த காலத்தில் கிராமத்தில் கூட பெண்கள் மாடர்ன் உடை அணிய ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆயிற்று. இருப்பினும் சீரியல்களில் பழைய பஞ்சாங்கம் தான். இந்த பழையவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது தான் சிறகடிக்க ஆசை தொடர். தற்போது தொடரில் பொங்கல் ஸ்பெஷல் எபிசோட் வரப்போகிறது, 1 மணி நேரம் சீரியல் ஒளிபரப்பாகிறது. தற்போது சீரியலில் நியூஎன்ட்ரி கொடுக்கிறார் பிரபல நடிகர் ஜெயமணி. இவர் திருமதி செல்வம் தொடரில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். தற்போது இவர் தொடரில் என்ட்ரி கொடுக்க காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்கின்றனர் இந்த தொடரின் ரசிகர்கள்.

Related Posts