பாலமே இடிந்துவிட்டது? இதில் கூட ஊழலா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, சோழிங்கநல்லூர் சுற்றித்தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் உள்ளன. சென்னையின் முக்கிய ரயில் பாதை என்றால் அது வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தான். இந்த ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த தில்லை கங்காநகர் பகுதியில் பறக்கும் ரயில் கட்டுமான பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதலில் தூண்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில், இரு தூண்களுக்கு இடையேயான மேற்பரப்பில் தண்டவாளம் அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

அப்பொழுது திடீரென பாரம் தாங்காமல் பரங்கிமலை வேளச்சேரி செல்லக்கூடிய பாதையில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் சரிந்து கீழே விழுந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை என்பது பெருமூச்சுவிட்டு கொள்ளும் தகவல். இங்கு தான் உயிர் சேதம் நடந்தால் தானே மக்கள் அதை வைரலாக்குவார்கள்? எல்லாவற்றிலும் ஊழல் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் பேர்வழிகள் இருக்கும்வரை இது போன்ற எத்தனை மேம்பாலங்கள் இடிந்து விழுமோ?

Related Posts