விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பயணிகள் உயிரிழந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளான போது அதில் ஐந்து பேர் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேபிள்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட வேண்டும் என விமானி விபத்துக்கு சற்று முன்னர் கட்டுப்பாட்டு அறையிடம் கோரிக்கை விடுத்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Posts