சாகவே துணிந்த பிரபலம்! மோசமான நட்புகள், விசாரிக்க கூட வரவில்லை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

செய்தி வாசிப்பாளராக சன் தொலைக்காட்சியில் பணியாற்றி பின்னர் சோசியல் மீடியா மூலம் வைரலானவர் தான் அனிதா. அவர் அந்த தொலைக்காட்சியில் இருந்து விஜய் டிவிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்னர் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருந்தது. அந்த புகழ் மூலம் சினிமாவில் கூட சில படங்களில் நடித்திருந்தார். சொந்தமாக வீடும் கட்டும் அளவிற்கு உயர்ந்தார். இன்ஸ்ட்டா, யூடியூப் என கிடைக்கும் சோசியல் மீடியா பிளாட் ஃபார்ம்களில் கூட பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரது விளையாட்டு பலருக்கும் வெறுப்பை தான் ஏற்படுத்தியது என்றே கூறலாம். பின்னர் மீண்டும் பிக்பாஸிற்கு பிறகு புதிய வீடு கட்டியது, கணவருடன் வெளிநாடு பயணம், யூடியூப் சேனல், ஆடை விளம்பரம் என செம பிஸியாக இருக்கிறார் அனிதா சம்பத். 

அண்மையில் ஒரு பேட்டியில் அனிதா சம்பத் அப்பா இறப்பு குறித்து பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக போறேன் என்று சொன்னபோது சந்தோஷமாக போயிட்டு வா என அப்பா சொன்னார்.100 நாட்கள் கழிந்து என்னுடைய வீட்டிற்கு தந்தையை பார்க்கலாம் என சென்றபோது அப்பா இறந்து போன செய்தி தான் வந்தது.பிக்பாஸில் என்னுடன் விளையாடிய சில போட்டியாளர்கள் ஒரு வார்த்தைக்கு கூட எங்க வீட்டுக்கு வந்து என்னிடம் பேசவே இல்லை. பிக்பாஸ் சென்று வந்த அந்த நேரத்தில் எனக்கு அதிகமான நெகட்டீவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருந்தது, அது என்னை மேலும் வேதனையில் ஆழ்த்தியது. அப்பா இறப்பு, அந்த நேரத்தில் கூட நெகட்டீவ் கமெண்ட்ஸ், இதனால் நான் செத்துப் போய் விடலாமா என்று கூட நினைத்தேன் என்று அனிதா சம்பத் கண்ணீரோடு பேசியிருக்கிறார். எப்படியோ அவற்றில் இருந்து மீண்டு வந்து இப்போது வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறார்.

Related Posts