முதலிரவில் மணமகள் மீது பாய்ந்த மணமகன் - பறிபோன உயிர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள ஹாமிர்பூரில் கடந்த 3 -ம் தேதி ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்துள்ளது. முதலிரவில் நீண்ட நேரம் உறவு கொள்ள வேண்டும் என்று கருதிய மணமகன் அதற்காக வயாகரா மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டுள்ளார்.

மாத்திரைகள் உதவியுடன் மணமகன் மிருகத்தனமாக உடலுறவு வைத்த நிலையில், மணமகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த மணமகளின் உறவினர்கள், அவரை மருத்துவமனையில் கடந்த 7 ம் தேதி அனுமதித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபரத்தை அறிந்த மணமகன் தலைமறைவாகியுள்ளார்.

தங்கையின் கணவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் காவல்துறையில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்ததாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது.

Related Posts