பிரபல நடிகைக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களுக்கு?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தவர் நடிகை வித்யா பாலன். அவர் ஹிந்தி படங்களில் தான் அதிகம் நடித்து வருகிறார். பாலிவுட் பக்கம் இவருக்கு வரவேற்பு அதிகம். அதிலும் குறிப்பாக அவர் நடித்த டர்ட்டி பிக்சர் படம் எந்த அளவுக்கு ஹிட் ஆனது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அந்த படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. நடிகை வித்யா பாலன் தற்போது மும்பை போலீசில் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். தனது பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி இருக்கும் நபர் பலரிடம் பணம் கேட்டு மோசடி செய்திருப்பதாக அந்த புகாரில் அவர் கூறி இருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக அந்த நபர் பலரிடம் மோசடியாக பணம் வாங்கி ஏமாற்றியிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.இது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதராண மக்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ? நாளுக்கு நாள் டிஜிட்டல் பணமோசடி அதிகரித்து வருகிறது என்பதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டிய நேரம்.

Related Posts