சமன் ரத்நாயக்க கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய ஆன்டிபாடி ஊசிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சமன் ரத்நாயக்க இன்று (01) பிற்பகல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் நேற்றைய (29) உத்தரவின் பிரகாரம் அது அமைந்துள்ளது.

சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற ஆன்டிபயாடிக்ஸ் ஊசிகள் தொடர்பான வழக்கு நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த தடுப்பூசி தொடர்பான சம்பவத்தில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவின் தொடர்பு குறித்தும் நீதவான் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக வாக்குமூலங்களைப் பெறுவதற்காக நேற்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகுமாறு அவரது குருநாகல் நிரந்தர முகவரிக்கு கடிதம் எழுதியுள்ளதாக அரசாங்கத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிஸ் லக்மினி கிரிஹாகம தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நேற்று முதல் நேற்று காலை வரை சமன் ரத்நாயக்கவின் தனிப்பட்ட கையடக்கத் தொலைபேசி அணைக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்தார்.

ரத்நாயக்க விசாரணை அதிகாரி ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் தனிப்பட்ட விடயம் ஒன்றிற்காக நேற்று முன்தினமும் நேற்றும் விடுப்பு எடுத்ததாக குறிப்பிட்டதாக அவர் இங்கு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரண்டு நாட்கள் விடுமுறை எடுப்பதாக கூறிய போதிலும், சமன் ரத்நாயக்க நேற்று மாலை வரை தனது அலுவலகத்தில் பணியாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

எனவே இந்த அனைத்து உண்மைகளையும் கருத்திற் கொண்டு இன்று காலை 9 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு சமன் ரத்நாயக்கவை உத்தரவிடுமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான், விசாரணையில் இருந்து எவரேனும் தப்பிச் சென்றால், உரிய சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.(p)


Related Posts