ஆளே மாறிப்போன முன்னணி நடிகை! நம்ப மாட்டீங்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தவர் ஜோதிர்மயி. இந்த படத்திற்கு பின்னர் பல படங்களில் நடித்திருப்பார். நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகையாக வருவார் என பார்த்தால் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். தமிழில் அவர் கடைசியாக நடித்து இருந்த படம் வெடிகுண்டு முருகேசன். அதற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.ஜோதிர்மயி மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஜோதிர்மயி தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். முடி வெள்ளையாகி, இப்படி மாறிட்டாரே என லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். பலரும் கண்டிப்பாக அந்த நடிகையாக இருக்க முடியாது என கூறி வருகிறார்கள். ஆனால் இவர் சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் நடித்த நாயகி என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

Related Posts