பழைய நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் எல்லோராலும் மதிக்கப்படும் நடிகர் ஜெய்சங்கர். இவர் படத்தில் மட்டும் ஹீரோ இல்லை நிஜத்திலும் ஹீரோ தான். ஒரு தயாரிப்பாளர் குறிப்பிட்ட தொகை தான் வைத்திருக்கிறார் என்றால் அந்த தொகைக்குள் படத்தை முடித்து கொடுக்கும் கெட்டிக்காரர் தான் இவர். ஆக்ஷன், த்ரில்லர் சினிமாக்கள் அதிகம் வெளிவருவதற்கு தொடக்க புள்ளியாக இருந்ததில் ஜெய்சங்கருக்கு பெரிய பங்கு உள்ளது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் போட்டிபோட்டு கொண்டிருந்த காலத்தில் இவர் போன்ற நடிகர்களுக்கும் வரவேற்பு குவிந்தது. சினிமாவை தாண்டி நிறைய சமூக நலத்திட்ட உதவிகளை செய்துவந்த ஜெய்சங்கர் கடந்த 2000ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜய் என்பவர் அப்பாவை போல மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். சஞ்சய் என்பவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார், இப்போது அவர் சீரியலில் வருவது இல்லை. நடிகர் ஜெய்சங்கர் ஒரு மகனின் புகைப்படம் தான் மேலே உள்ளது.

Related Posts