குடும்பத்தோடு மன அழுத்தத்திற்கு உள்ளான நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அரசியல் விமர்சகர் சவுக்கு ஷங்கர் என்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ்க்கு , உதயநிதி ரூபாய் 50 கோடி பொருட் செலவில் துபாயில் வீடு வாங்கி கொடுத்து இருக்கிறார் என்று கூறி இருந்தார் அது குறித்து நடிகை நிவேதா பெத்துராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். நடிகை கூறியது, எனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய்யான செய்திகள் அண்மையில் பரப்பப்படுகிறது. இந்த செய்திகளை பரப்பும் முன் யோசியுங்கள். நானும் எனது குடும்பத்தினரும் சில நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தோம். என்னை குறித்து இதுவரை பேசப்பட்ட எந்த தகவலும் உண்மை இல்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். 

கடந்த 2002 ஆண்டு முதல் நாங்கள் குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறோம்.பத்திரிகையில் இன்னும் கொஞ்சம் மனிதாபிமானம் இருக்கிறது, அவர்கள் என்னை இப்படி அவதூறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன் என்று நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ளார். இதனால் தான் நிவேதா பெத்துராஜ் சில காலம் சினிமாவில் நடிக்காமல் உள்ளார் என்பது இப்போது தெளிவாகிறது. ஒரு படத்தில் நிவேதா பெத்துராஜ், உதயநிதி உடன் சேர்ந்து நடித்தது மட்டும் தான் அதுவே நிவேதா பெத்துராஜை எவ்வளவு மோசமான அவதூறுகளுக்கு ஆளாக்கியுள்ளது.

Related Posts