தேர்தல் திகதி தொடர்பில் வெளியான தகவல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எதிர்வரும் சித்திரை புத்தாண்டிற்கு பின்னர் பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், ராஜபக்ஸ குடும்பத்தின் முக்கியஸ்தருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு சிறப்புரிமைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு  வழங்குவதாக அறிவித்துள்ள போதிலும், அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு கிடையாது எனவும் கூறியுள்ளார்.

பஷில் ராஜபக்ஸவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரும்பான்மை அதிகாரத்தை கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். (P)


Related Posts