அக்காவிடம் சண்டை போட்ட மாமனை கொலை செய்த மச்சான்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் பிஜு வயது 22. இவரும் அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 11 மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிஜு மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளார். இந்நிலையில் பிஜுவின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என அறிந்த அவர் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை பிஜுவின் மனைவியின் 15 வயது தம்பி பார்த்துக்கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த சிறுவன் என் அக்காவிடம் தினமும் சண்டைபோடுகிறாய் நீ செத்து போ என கூறி அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிஜு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts