40 வயதில் திருமணம் செய்த பிரபல நடிகை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மீரா சோப்ரா. தமிழில் இவருக்கு வாய்ப்பு சரியாக அமையாத காரணத்தால் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மீரா சோப்ராவின் திருமணம் பிராம்மண்ட முறையில் ராஜஸ்தானில் நடந்துள்ளது.கடந்த மூன்று ஆண்டுகளாக ரக்ஷித் என்பவரை நடிகை மீரா சோப்ரா காதலித்து வந்துள்ளார். 40 வயதாகும் நடிகை மீரா சோப்ரா, மூன்று ஆண்டுகள் காதலுக்கு பின் தனது காதலர் ரக்ஷித் என்பவரை நேற்று கரம் பிடித்துள்ளார். இந்த நிலையில், தன்னுடைய திருமண புகைப்படங்களை நடிகை மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவருடைய தற்போதைய புகைப்படத்தை பார்க்கும்போது, இவரா அந்த நடிகை என்பது போல தோற்றமளிக்கிறார். முகம், நிறம் என எல்லாமே மாறிப்போய் வேறு ஒருவர் போலவே உள்ளார்.


கனடாவில் 6 இலங்கையர்கள் கொ லை | குற்றவாளிக்கு விளக்கமறியல் ஒத்திவைப்பு | Thedipaar News


Related Posts