நல்லூரிலிருந்து வவுனியா வரை பேரணி ஆரம்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வெடுக்குநாறிமலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி யாழிலிருந்து வவுனியா வரையான பேரணி இன்று காலை நல்லூரில் ஆரம்பிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி தொடச்சியாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றையதினம் வவுனியாவிலும் பாரிய போராட்டம் நடைபெறவுள்ளது.

இப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழிலிருந்து வவுனியா வரையிலான வாகனப் பேரணியொன்று இன்று காலை யாழ்ப்பானம் நல்லூர்க் கந்தன் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  

இஸ்ரேல் தாக்குதல் | 29 பாலஸ்தீனியர் மரணம்! | Thedipaar News

Related Posts