இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேத் மிடில்டன் கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அப்போது அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து எதிர்மறையான தகவல்கள் பரவின.

இந்நிலையில், இளவரசி கேத் மிடில்டன் குறித்த வருத்தம் தரக்கூடிய செய்தி மீண்டும் பரவத் தொடங்கியது. லண்டனில் நேற்று நடந்த செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து, எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இளவரசி மறைந்துவிட்டதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் பதிவிட்டிருந்தனர்.

இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை எக்ஸ் நிறுவனம் ஆராய்ந்தது. எதிர்மறையான தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்தது. இதில், இளவரசி கேத் மிடில்டன் மறைவு குறித்து வெளியான தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்திருப்பதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts