சீரியல் நடிகையின் துணிச்சல் செயல் குவியும் பாராட்டு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இப்போதெல்லாம் தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் பலரும் மக்களிடம் அதிகம் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் சோசியல் மீடியா தான். முன்னரெல்லாம் நடிகைகளின் பேட்டி வருவதே அரிதாக இருக்கும் ஆனால் இப்போது சோசியல் மீடியா மூலம் பிரபலங்கள் மக்கள் மத்தியில் எளிதாக ரீச் ஆகி விடுகிறார்கள்.தங்களின் அன்றாட வாழ்க்கை, அழகு, உடற்பயிற்சி, குடும்பம் என ஒன்றையும் மறைக்காமல் ஓப்பனாக சொல்லிவிடுகிறார்கள். அதுபோலவே நடிகர் நடிகைகளின் வாழ்வில் நடக்கும் சந்தோஷ, துக்க சம்பவங்களும் விரைவில் மக்களை வந்தடைந்து விடுகிறது. அப்படி கடந்த வருடம் சீரியல் நடிகை ஸ்ருதி வாழ்க்கையில் மிகவும் மோசமான சம்பவம் நடந்தது. திருமணமான ஒரே வருடத்தில் அவரது கணவர் அரவிந்த் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 

இதைக் கேள்விபட்டு ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள், ஆனால் அவரோ எனது கணவர் என்னுடன் தான் இருக்கிறார் என அவரே தைரியமாக மாறியுள்ளார்.இந்த நிலையில் நடிகை ஸ்ருதி கணவர் இறப்பிற்கு பிறகு சில மாதங்கள் ஆனதால் தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அதாவது அவர் சன் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்க இருக்கும் லட்சுமி தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். கணவரை இழந்த பெண் விரைவில் தனது சோகத்தை மறந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்புவது என்பது எளிதான விஷயம் இல்லை. ஆனால் நடிகை சுருதி இந்த விஷயத்தில் பல பெண்களுக்கு முன் உதாரணமாக உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related Posts