குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகையின் உயர்ந்த உள்ளம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேரளாவை பூர்வீகமாக கொண்ட அபிராமி மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்..அதன்பிறகு பல படங்களில் நடித்துவிட்டார். கல்லூரியில் படிக்கும்போதே சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்து வந்த அபிராமிக்கு முதல் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. அதன்பின் அர்ஜுன் நடிப்பில் வெளியான வானவில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தோஸ்த், சமுத்திரம், சார்ளி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்திருந்தார். பிறகு பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரது சினிமா பயணத்தில் முக்கியமான படம் என்றால் அது விருமாண்டி. கமல்ஹாசன் இயக்கி, நடித்த விருமாண்டி படத்தில் நாயகியாக நடித்த அபிராமிக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பிரபல எழுத்தாளரான பவணனின் பேரன் ராகுல் பவணனை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாத்துறையை விட்டு ஒதுங்கி இருந்தார். பிறகு ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அபிராமி தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு நடிகை அபராமி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அபிராமியின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.

Related Posts