பதறி கொண்டு ஓடிய பாலிவுட் நடிகை! நெட்டிசன்கள் வாயில் விழுந்து வாங்கிக்கொண்ட கதை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கோவை ஈஷா யோகா மையம் என்றால் அதை அறியாதவர்களே இல்லை என்ற நிலை தான் இன்று இந்தியாவில்! அந்த ஆசிரமத்தை நிறுவிய ஜக்கி வாசுதேவ் எனும் சத்குருவுக்கு உலகம் முழுக்க பக்தர்கள் உள்ளனர். அவர் காட்டை அழித்து ஆசிரமம் கட்டினார் என்பதெல்லாம் இன்று எடுபடாது ஏனெனில் உலக தலைவர்களே அவரது கையில் தான் என்றால் அவரது செல்வாக்கை புரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் பெரிய பெரிய விஐபிகள் எல்லாம் இவருடைய தீவிர பக்தர்கள். அம்பானி போன்ற பெரிய விவிஐபி-யின் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் இவர் முக்கிய புள்ளியாக பங்கேற்பார். 

சிவராத்திரி என்றாலே சிவன் கோவிலில் விடியவிடிய கண்முழிக்க வேண்டும் என்ற புராதனம் எல்லாம் போய், சிவராத்திரி என்றாலே வண்டி கட்டிக்கொண்டு, ஈஷா யோகா மையம் சென்று, அங்கு ஆயிர கணக்கில் செலவு செய்து, டிக்கெட் வாங்கி இவரை பார்க்கத்தான் மக்கள் செல்கிறார்கள். ஒரு நாள் செலிபிரிட்டியை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அதை மிஸ் செய்வோமா? அது போல் தான் சிவராத்திரி அன்றும்! இது ஒரு வியாபாரம் என்பதை புரிந்து கொள்ளாத மக்கள் இருக்கும் வரையில் இவர் போன்றவர்கள் வளர்ந்து கொண்டே தானே இருப்பார்கள்? 

இந்த நிலையில் அண்மையில் இவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென்று இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உலக அளவில் உள்ள இவருடைய பக்தர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியிலிருந்து பலரும் இவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்து வருகின்றனர். 

இந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தும் இணைந்துள்ளார். ஜக்கி வாசுதேவின் தீவிர பக்தரான கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது, மருத்துவமனையில் ஐசியூவில் இருக்கும் சத்குருவின் வீடியோவை பார்த்த பிறகுதான் அவரும் ரத்தம், சதை கொண்ட மனிதர் என்பதே எனக்கு நினைவுக்கு வருகிறது. எனக்கு தலையே சுற்றுகிறது. அவர் குணமடைய வேண்டும், இல்லையெனில் சூரியன் உதிக்காது என டிவீட் செய்துள்ளார். கங்கனா ரனாவத்தின் டிவீட்டை தற்போது பலரும் டிரோல் செய்து வருகின்றனர். 

அவரது பதிவின் அசல் ஆங்கில பதிவு, Today when I saw Sadhguru ji lay on ICU bed I was suddenly hit by the mortal nature of his existence, before this it never occurred to me that he is bones, blood, flesh just like us. I felt God has collapsed, I felt earth has shifted, sky has abandoned me, I feel my head spinning, I can’t make sense of this reality and choose not to believe this but then suddenly I break down, today millions of people ( devotees) share my grief, I want to share my pain with you all, I am not able to contain it. He better be fine or sun won’t rise, earth won’t move. This moment hangs lifeless and still

சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது | Thedipaar News

Related Posts