தற்கொலைக்கு முயன்ற அமைச்சர்! ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்பி-யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். கணேசமூர்த்தி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியவில்லை என்றும், தற்போது ICU வில் தீவிர சிகிச்சையில் உள்ள அவர், சுயநினைவின்றி உள்ளதாகவும் துரை வைகோ தெரிவித்தார். கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts