அம்மாவிற்காக கோவில் கட்டிய விஜய்! வைரலாகும் சிலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.இப்போது கோட் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார். நேற்று நடிகர் விஜய் சாய் பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது.ஆனால், அது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாதாம். நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவிற்காக தனக்கு சொந்தமான நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாய் பாபா கோவில் கட்டியுள்ளார். 

தாய் வேண்டுகோளிற்கு இணங்க இந்த கோவில் கட்டியதாக கூறப்படுகிறது, சிலரோ அரசியல் வருகைக்காக கட்டிய வீடு என்கிறார்கள். உண்மை என்னவென்றால் விஜயின் தாயார் சாய்பாபா மீதுகொண்டுள்ள அன்பு காரணமாக, விஜய் இந்த கோவிலை தாய்க்காக கட்டியுள்ளார். கொரட்டூரில் உள்ள தனது சொந்த நிலத்தில் தன்னுடைய தாய்க்காக விஜய் கட்டிய இந்த சாய் பாபா கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. அங்கு விஜய் எடுத்துகொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Related Posts