சினிமாவில் நடக்கும் அசிங்கம்! அசால்டாக பதில் கூறிய நடிகை !

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

எமன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இதனை அடுத்து இவர் காளி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின்னர் இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஷில்பா மஞ்சுநாத் கன்னடம் மற்றும் தெலுங்கிலும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் நடித்த சில காலத்திலே பிஸியான நடிகையாக தென்னிந்திய மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் இவர் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஹீரோயினுக்கான வெற்றிடத்தை நிரப்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷில்பாவிடம், சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. பதில் அளித்த அவர், யாரும் நேரடியாக கேட்க துணிவு கிடையாது. வேறொரு மூலமாக அப்படி கேள்வி கேட்பார்கள். அந்த பேச்சு வரும் போது நான் கட் பண்ணிவிடுவேன். கடைசியில் அவர் அப்படி கேட்க வாய்ப்பே கொடுக்கமாட்டேன் என்று ஷில்பா கூறியுள்ளார்.

Related Posts