இறால் சாப்பிட்டதால் உயிரிழந்த மருத்துவர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கேரளாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-நிஷா தம்பதியின் மகள் நிகிதா என்பவர். இறால் சாப்பிட்டதால் நிகிதாவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மறுநாள் அவர் சுவாசக் கோளாறு காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டதே மரணத்துக்குக் காரணம் என தெரியவந்தது. நிகிதா தொடுபுழாவில் உள்ள தனியார் கண் கண்ணாடி கடையில் பார்வை மருத்துவராக பணியாற்றி வந்தார். அதேநேரம், மருத்துவர்களின் அலட்சியமே தங்கள் மகளின் இறப்பு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

Related Posts