மகனை சினிமாவுக்கு அனுப்புகிறாரா ஜோதிகா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நாயகியாக நடித்து கலக்கி வருபவர் நடிகை ஜோதிகா. திருமணத்திற்கு முன்னர் வரை தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்டு கொண்டிருந்தவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின்னர் ஆள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். தன்னுடைய இரு குழந்தைகளையும் வளர்த்து ஆள் ஆக்கிய பின்னர் சூர்யா குடும்பம் ஜோதிகாவை நடிக்கவேண்டும் என சொல்லிவிட்டார்கள் போல! அதனால் தன்னுடைய குழந்தைகள் வளர்ந்த பின்னர் இப்போது சினிமாவில் இறங்கியுள்ளார், அதுவும் முன்னர் இருந்ததை விட பல மடங்கு உயர்ந்துள்ளது இவர் ரசிகர் பட்டாளம்

 36 வயதினிலே, ராட்சசி, மகளிர் மட்டும், உடன்பிறப்பே என தமிழில் நடித்து வந்தவர் மலையாளத்தில் காதல் தி கோர், ஹிந்தியில் சைத்தான் என மற்ற மொழி படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஜோதிகாவிடம் உங்கள் மகன் தேவ் சினிமாவில் நடிப்பாரா என கேட்டுள்ளனர்.அதற்கு அவர், நிச்சயம் அவர் நடிக்க வாய்ப்பு இல்லை, எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.மகன், மகள் இருவருமே படிப்பின் மீது ஆர்வமாக இருக்கிறார்கள், ஒருவேளை படிப்பு முடித்து நடிக்க வேண்டும் என்று விரும்பினால் அது அவர்களின் விருப்பம் என கூறியுள்ளார்.

Related Posts