ரஜினிகாந்த் ஏன் அடிக்கடி கையை இப்படி வைத்துள்ளார்? வியக்க வைக்கும் பின்னணி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் ரஜினிகாந்த் தன் கையின் கட்டை விரல் மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது குறித்து ஒரு யோகா நிபுணர் கூறுகையில், ரஜினிகாந்த் பின்பற்றும் கை முத்ரா சின் முத்ரா எனப்படும். அப்படி செய்யும்போது மூளை நரம்புகள் நன்றாக வேலைசெய்யுமாம், இதனால் நினைவாற்றல் அதிகமாகுமாம். மன அழுத்தத்தை, கோபம், தூக்கமின்மை, தலைவலி இவற்றையெல்லாம் நீக்குகிறதாம். ரஜினி அப்படி தனது கைகளை வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு நன்மை இருக்கிறதா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர் ரசிகர்கள். 

ரஜினி மட்டுமா? பல விளையாட்டு வீரர்கள் இதுபோன்ற வித்தியாசமான முத்திரையை பின்பற்றுகிறார்கள். கைகளின் முத்திரைகளுக்கு பின்னால் பல காரணங்கள் உண்டு. மன அமைதி ஏற்பட, பசிக்க, கழிவு வெளியேற, கண்கள் நன்றாக தெரிய, வயிறு கோளாறு நீங்க, இருதயம் நன்கு செயல்பட என எல்லா உடல்,மன உபாதைகளுக்கும் கை முத்திரைகளின் மூலம் தீர்வு உண்டு என்கிறது பழமை வாய்ந்த மருத்துவமும் யோகாவும்.அவற்றுள் ஒன்றைத்தான் ரஜினி மேற்கொண்டு வருகிறார்.

Related Posts