ரசிகரின் கமெண்ட்டிற்கு கடுப்பான யாஷிகா! பளிச் பதில்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த்.இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். பிரபலம் என்றால் அப்படி ஒரு பிரபலம். ஒரே படத்தில் முன்னணி ஹீரோயினுக்கு இணையாக பிரபலமாகிவிட்டார். சில வருடங்களுக்கு முன்பு யாஷிகா, ECR ரோட்டில் அதிவேகமாக காரில் சென்று விபத்து ஏற்படுத்தினார். அவர் கூட வந்த அவரது தோழி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்திலிருந்து மீண்ட யாஷிகா சில படங்களில் நடித்தார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அவரது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் செய்வார்களே ஒரு கமெண்ட் அதை என்னவென்று சொல்வது? இன்ஸ்டாவை இழுத்து மூடும் அளவிற்கு இருக்கும். ஆனால் போட்டோ பதிவிட்ட சில நொடிகளிலேயே மூவாயிரம் கமெண்ட் வந்து நிற்கும். இந்நிலையில் இவர் பதிவிட்ட புகைப்படத்திற்கு கமெண்ட் செய்த ஒருவர், யாஷிகா ஆனந்த் விபத்து பிறகு அழகாக இருக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த யாஷிகா, அழகுக்காக நான் எந்த பிளாஸ்டிக் சர்ஜரியும் செய்யவில்லை என்று பதில் அளித்துள்ளார். இப்போது சில காலமாக இவர் நடிக்கும் படங்கள் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. இருப்பினும் தொடர்ந்து முயன்று வருகிறார்.

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்