பத்துவருடம் கழித்து நயன்தாராவுக்கு கிடைத்த வாய்ப்பு! விடுவாரா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் நயன்தாரா கொடி தான் பறக்குது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வருவதாக கூறுகின்றனர். ஏற்கனவே தமிழில் இவருக்கு படங்கள் குவிந்துள்ளது. நயன்தாரா பாலிவுட்டில் நடித்த படம் என்றால் அது ஜவான் தான். இப்படத்தில் ஷாருக்கான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஜவான் படத்திற்கு முன்பே நயன்தாராவுக்கு ஷாருக்கான் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் நம்ம நயன்தாரா தான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்றுவிட்டாராம். 

என்னது? ஷாருக்கான் உடன் பாலிவுட்டில் வாய்ப்பு என்றால் அது சும்மாவா? நயன் எப்படி அதை புறக்கணித்தார்? என்று தானே யோசிக்கிறீங்க? ஆம், 2012ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் நடிகை பிரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த பாடலில் முதன் முதலில் நடனமாட இருந்தது நடிகை நயன்தாரா தானாம். ஆனால், நயன்தாரா அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். என்ன காரணம் நிராகரிக்க என தெரியவில்லை. ஆனால் 2012 இல் நிராகரித்த வாய்ப்பு இப்போது 2022 இல் தான் கிடைத்துள்ளது.

Related Posts