மேக்கப் ரூமில் ஏற்பட்ட மோசமான அனுபவம்! நடிகையின் அழுகுரல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சீரியல் நடிகைகள் தான் இப்போது சினிமா நடிகைகளை விட மிகவும் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.அதற்கு முக்கிய காரணமே சோசியல் மீடியா தான். முன்னரெல்லாம் நடிகைகளின் இன்டர்வியூ என்பதை பார்ப்பதே அரிதாக இருக்கும். ஆனால் இப்போது? அவர்களே சோசியல் மீடியாவில் தங்களை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி பாலிவுட் சின்னத்திரையின் பிரபல நாயகி படப்பிடிப்பு தளம் ஒன்றில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.இந்த பிரச்சனையை வெளியே கூற பயந்து இத்தனை நாள் சொல்லாமல் இருந்ததாகவும், தற்போது தைரியத்துடன் வெளியே சொல்வதாகவும் கூறியிருக்கிறார். 

பாலிவுட் சின்னத்திரையில் பிரபலமானவர் தான் கிருஷ்ண முகர்ஜி.தங்கல் டிவியில் பிரபல நிகழ்ச்சியான சுப் ஷகுன் நிகழ்ச்சி செய்யத்தொடங்கியபோது அந்த மோசமான அனுபவம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளர் குந்தன் சிங்கும் இவரை பலமுறை துன்புறுத்தியுள்ளார்கள். ஆடைகளை மாற்றும் போது இவரை மேக்கப் அறையில் அடைத்துள்ளனர். 5 மாதங்களாக இன்றுவரை இவரது சம்பளத்தை தரவில்லை, இதற்காக தயாரிப்பு நிறுவனத்தை பலமுறை அணுகியும் சரியான பதில் கிடைக்கவில்லை.இறுதியாக இந்த நடிகை பாதுகாப்பற்று உடைந்து பயந்து விட்டதாகவும் இதே போல் மீண்டும் நடந்தால் என்ன ஆகும் நீதி வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Related Posts