போரின் சாட்சியம்: கனடாவில் வெளியான தமிழின படுகொலை குறித்த நூல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

2010ம் ஆண்டு MV Sun Sea கப்பல் மூலம் கனடா வந்தடைந்த அகதிகளில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு 2009 ஆம் ஆண்டு May மாதம் 17ஆம் திகதி வரை முள்ளிவாய்க்காலில் வாழ்ந்தவர்.

முள்ளிவாய்க்கால் யுத்த மீறல் குற்றமாக சுட்டிக் காட்டப்படும் கிளஸ்டர் குண்டுத்தாக்குதல் இடம்பெற்றதற்கான நேரடி சாட்சியம் இவராவார்.

இவர் எழுதிய  “போரின் சாட்சியம்” நூல் British Colombia மாகாணத்தின் Burnaby நகரில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. 

இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினர் எவ்வாறு இனப்படுகொலை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைக்கிறது.

முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களின் நேரடிச் சாட்சியங்களில் ஒருவரான சுரேன் கார்த்திகேசு இந்த நூலை தொகுத்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலில் கணவன், மூன்று பிள்ளைகளை இழந்த சாந்தி இந்த நூலை வெளியிட்டிருந்தார்.

Related Posts