கொடைக்கானலில் கோல்ப் விளையாடிய தமிழக முதல்வர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொடைக்கானலுக்கு கடந்த திங்கள்கிழமை குடும்பத்தினருடன் ஓய்வெடுப்பதற்காக வந்துள்ள முதல்வர் ஸ்டாலின், தனியார் விடுதியில் தங்கியுள்ளார். 

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, மாலை 5.45 மணிக்குமேல் கோல்ப் கிளப்புக்குச் சென்ற முதல்வர், அங்கிருந்து பேட்டரி கார்மூலம் மைதானத்துக்குச் சென்றார்.அங்கு சுமார் அரை மணி நேரம் கோல்ப் விளையாடி மகிழ்ந்தார்.

பின்னர் கோல்ப் கிளப் சென்று, அங்கிருந்து காரில் தனியார் விடுதிக்குத் திரும்பினார். முதல்வர் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

ஆனந்தமாக ஆட்டம் போட்ட யானை | Thedipaar News

Related Posts