பிரபு தேவாவை திட்டி தீர்க்கும் மக்கள் ஏன்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயங்குனர் என பல திறமைகள் கொண்டவர் பிரபுதேவா. அவரது நடனத்திற்கு என்றே பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. வயதானாலும் கூட இன்றும் இளமையாகவே தோற்றமளிக்கிறார். இவரது பல பேட்டிகளை பார்க்கும்போது, யாரையும் தவறாக பேசாமல் தன்னோடு பணியாற்றிய எல்லோரையும் பாராட்டியே பேசுவார். சமீபத்தில் தான் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் 100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்என்ற உலகசாதனை முயற்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பிரபுதேவா நேரில் கலந்துகொள்ள இருந்தார். 

சுமார் 5000 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்க வெயிலில் நின்றிருந்தனர். ஆனால் பிரபுதேவா வரவே இல்லை. அதனால் கோபமான பெற்றோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் உடன் வாக்குவாதம் செய்தனர்.7.30 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி 9 மணி ஆகியும் தொடங்கவில்லை. அதன் பிறகு தான் பிரபுதேவா வரவில்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எல்லோரும் பிரபுதேவாவை திட்டி தீர்த்து இருக்கின்றனர். ஒரே நாளில் தான் சேர்த்து வைத்த மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார்.

Related Posts