நடிகை வரலட்சுமியின் காதலர் கொடுத்த விலையுர்ந்த பரிசு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சரி அதை ஏற்று பிரமாதமாக நடித்துவிடுவார். நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிவிட்டார் வரலட்சுமி. போல்டான நடிப்பு, படபடவென பேச்சு என அவரது நடிப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வீரத்தமிழச்சி என்ற பெயருக்கு பொருத்தமாக இருப்பார். தற்போது இவர் தமிழை தாண்டி பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கி வருகிறார். பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் வரலட்சுமி வாழ்க்கையில் காதலும் மலர்ந்துள்ளது.நிக்கோலாய் என்பவரை காதலித்து வந்த வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தமும் அவருடன் முடிந்துள்ளது. 

இவ்வளவு அழகு, வசதி,திறமை இருந்தும் கூட இரண்டாவது மனைவியாக வரலட்சுமி ஏன் ஒப்புக்கொண்டார் என்ற குமுறல் தான் இணையம் முழுக்க. மாப்பிள்ளைக்கே 15 வயதில் மகள் இருக்கும்போது, வரலட்சுமி ஏன் இந்த நபரை காதலித்தார்? என்றவாறு தான் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் திருமணம் இன்னும் நடக்காத நிலையில் நிக்கோல் வரலட்சுமிக்கு ஒரு விலை உயர்ந்த பரிசு கொடுத்துள்ளார்.அது என்னவென்றால், மும்பையில் வரலட்சுமிக்கு நிக்கோலாய் மொத்தம் இரண்டு பங்களாக்களை வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த பங்களாக்களில் சொகுசு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன என்றும்; அதன் விலை பல கோடி ரூபாய் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts