வெள்ளை மாளிகையை பரபரப்பாக்கிய விபத்து!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அதிவேகமாக வந்துகொண்டிருந்த ஒரு கார், திடீரென வெள்ளை மாளிகையின் நுழைவு வாயில் நோக்கி பாய்ந்து வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் சுதாரிப்பதற்குள் அந்த கார், பாதுகாப்பு தடை மீது மோதி நொறுங்கியது.

காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 15-வது தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ என்.டபுள்யூ சந்திப்பில் உள்ள பாதுகாப்பு தடையில் வாகனம் மோதியதாக வாஷிங்டன் பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

இது பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை வளாகம் பரபரப்பானது. பாதுகாப்பு நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஆனால் நடந்தது விபத்துதான் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Posts